Powered By Blogger

செவ்வாய், 23 நவம்பர், 2010

உள்ளம் திருடிய கள்வன்

இரவு சூரியனே
என் இதயம்
திருடியவனை கண்டாயோ ?
உறவுக்கொள்ள வருவானோ ?
உள்ளம் திருடிய கள்வன் !
நேற்றுவரை நித்திரை இல்லை
கனவுகாண எவருமில்லை
காற்றிலே கோலமிட
கற்பனையில் விளையாட
கடல் அலையை ரசித்திட
ரோஜா வங்கி தந்திட
ஒருவனையும் மனம் ஏற்கவில்லை
அவனை காணும்வரை!
சொல்லாமலே சொல்லுகின்றான்
சொக்கவைத்து கொல்லுகின்றான்
அல்லாமலே அல்லுகின்றான்
அழகு விழிகளாலே கிள்ளுகின்றான்
உதடுகளால் உச்சரிப்பானோ
உற்றுபார்த்து பற்றவைப்பனோ
விடை தேடும் விடலை நான்
விழிகள் திறந்து பார்க்கசொல்லேன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக