Powered By Blogger

வியாழன், 10 ஜூன், 2010

நினைவோ அர்த்தமுள்ள கவிதையாக....

இனிதான மூன்று ஆண்டுகள்
இன்னமும் மறக்கவில்லை
அதனை தொடர்ந்து
எத்தனை மாற்றங்கள்..

இதுதானாஇதுதானா
என்று இன்னமும் நீழ்கிறது
நடந்தவையை என்னும் பொழுது...

புதிய பூ மலைர்கிறது
புதைந்த நாட்களை நினைக்கும்போது...!

ஆத்திச்சூடியின் அருஞ்சுவையை
அறியவில்லை - ஆனால்
காதல் சுவடியை புறட்டாமல்
இருந்தது இல்லை...

நினைவில் நிறுத்தி கொள்ள
நிறைய நண்பனும் உண்டு
நினைதாலே கண் கலங்கும்
காயங்களும் உண்டு...

ஒரு டீக்கும்
ஒரு பஜ்ஜிக்கும்
எத்தனையோ போட்டிகள்...

வென்ற கோப்பைகள்
அலமாரியை அலங்கரிக்க
வென்ற நினைவோ
நித்தமும் வெற்றியை தேடி
பயணம் தொடர்கிறது
நினைவோ அர்த்தமுள்ள கவிதையாக....!

3 கருத்துகள்: